என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சந்தோஷத்தில் கலவரம்
நீங்கள் தேடியது "சந்தோஷத்தில் கலவரம்"
கிராந்தி பிரசாத் இயக்கத்தில் புதுமுகங்கள் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சந்தோஷத்தில் கலவரம்’ விமர்சனம். #SanthoshathilKalavaram
ஒரே கல்லூரியில் படித்த ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள் நண்பர்களாக பழகி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு பங்களாவிற்கு விடுமுறையை கழிக்க செல்கிறார்கள். இதில் ஒருவர் ஆன்மீகம், தியானம் பற்றி நிறைய தெரிந்தவர். அந்த பங்களாவில் ஒரு ஆவி இருப்பதை இவர்களுக்கு தெரிய வருகிறது.
அந்த ஆவி இவர்களை வெளியே போக விடாமல் தடுக்கிறது. மேலும், நண்பர்களில் ஒருவரை கொலை செய்ய துடிக்கிறது. அந்த ஆவி யார்? எதற்காக நண்பர்களில் ஒருவரை கொலை செய்ய துடிக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக் என புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இதில் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் நிரந்த் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். மற்றவர்கள் நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். ரவி மரியா இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.
வழக்கமான பேய் படக் கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கிராந்தி பிரசாத். நான்கு ஆண்கள், நான்கு பெண்கள், அவர்களுக்குள் ரொமான்ஸ், சண்டை என வழக்கமான திரைக்கதை. பேய் படங்களுக்கு உரித்தான பங்களா என அதே டெம்ளேட்டுடன் படத்தை இயக்கி இருக்கிறார். ஆனால், பாசிடிவ் வைப்ரேஷன் நம்மிடம் இருந்தால், எந்த தீய சக்தியும் ஒன்றும் செய்யாது என்று சொல்லியிருக்கிறார்.
இப்படத்துக்கு பவுலியஸ் என்ற ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் பணியாற்றியவர். இவருடன் ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர்களின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. படத்திற்கு பலம் என்றும் சொல்லலாம். சிவநக் இசையில் அனைத்தும் கேட்கும் ரகம்.
மொத்தத்தில் ‘சந்தோஷத்தில் கலவரம்’ சந்தோஷம் குறைவு.
கிராந்தி பிரசாத் இயக்கத்தில் நிராந்த் - ருத்ரா ஆரா நடிப்பில் உருவாகி இருக்கும் `சந்தோஷத்தில் கலவரம்' படத்தின் முன்னோட்டம். #SanthoshathilKalavaram #Niranth #RudraAura
ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் திம்மா ரெட்டி.வி.சி. தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சந்தோஷத்தில் கலவரம்'.
நிரந்த், ருத்ரா ஆரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ராவி மரியா வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - ஹரிசன் லோகன் ஹோவஸ், பவுலியஸ் கொன்டிஜிவாஸ், ஷிரவன் குமார், இசை - சிவநாக், பாடல்கள் - கபிலன், மணி அமுதன், ப்ரியன், படத்தொகுப்பு - கிராந்தி குமார், ஒலிப்பதிவு - அருண் வர்மா, தயாரிப்பு - ஸ்ரீ குரு சினிமாஸ், எழுத்து இயக்கம் - கிராந்தி பிரசாத்.
படம் பற்றிய இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசியதாவது,
ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் `தீமைக்கும் நன்மைக்கும்' இடையில் நடக்கும் மோதல் என்று டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றார்.
படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #SanthoshathilKalavaram #Niranth #RudraAura
சந்தோஷத்தில் கலவரம் படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் கிராந்தி பிரசாத், காஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். #CosmicEnergy
முற்றிலும் புதியவர்களின் முயற்சியில் உருவாகி நவம்பர் 2-ல் வெளிவரும் படம் 'சந்தோஷத்தில் கலவரம்'. இப்படம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத் கூறும்போது, "எனக்கு சினிமா மீது அவ்வளவு காதல். எவ்வளவோ வேலை வாய்ப்பு வருமானம் எல்லாவற்றையும் இழந்து விட்டு துறந்து விட்டுத்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன்.
இந்தப் படத்தைப் பல போராட்டங்களைச் சந்தித்துதான் எடுத்தேன். ஆனால் படம் எடுத்ததை விட வெளியிடுவதையே மிகவும் சிரமமாக உணர்ந்தேன். கடைசியில் நானே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். வெளியிடுகிறேன். நவம்பர் 2-ல் உலகம் முழுதும் வெளியாகிறது. இந்தப் படம் காதல், நட்பு, நகைச்சுவை, ஆக்ஷன், ஹாரர், த்ரில்லர் என்று எல்லாமும் கலந்த ஒன்றாக இருக்கும்.
இந்த உலகம் இரு வேறு சக்திகளால் இணைந்தது. பாசிடிவ் சக்திக்கும் நெகடிவ் சக்திக்கும் இடையே தினமும் போர் நடக்கிறது. இது ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொருவருக்குள்ளும் நடைபெறுகிறது. இங்கே யாருக்கும் காஸ்மிக் எனர்ஜி பற்றித் தெரிவதில்லை. படித்தவர் கூட அறியவில்லை. அதன் அற்புதங்கள் எப்படி வெளியே தெரியும்? நான் காஸ்மிக் சக்தி பற்றிப் படத்தில் கூறியிருக்கிறேன்.
இந்த உலகில் உள்ள பாசிடிவ் எனர்ஜியையும் காஸ்மிக் எனர்ஜியையும் சேர்த்தால் பெரிய அற்புதம் நிகழும். எவ்வளவோ படித்தாலும் காஸ்மிக் எனர்ஜி பற்றி யாருக்கும் தெரிவதில்லை. அதைப் பற்றிப் படத்தில் கூறியிருக்கிறேன்’ என்றார்.
சந்தோஷத்தில் கலவரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பாக்யராஜ், பிரச்சனை இல்லாமல் வெற்றி இல்லை என்று கூறியிருக்கிறார். #SanthosathilKalavaram
முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் 'சந்தோஷத்தில் கலவரம்'. இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத்லேப் திரையரங்கில் நடைபெற்றது.
படத்தின் பாடல்களை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார். அவர் விழாவில் பேசும் போது, "இங்கே உள்ள படக் குழுவைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இங்கே பேசியவர்கள் எல்லாரும் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு தமிழில் பேச முயற்சி செய்து தமிழில் பேசினார்கள், அந்த ஆர்வம் ஆச்சரியமாக இருந்தது.
இங்கே கதாநாயகன் ஆர்யன் பேசும் போது தமிழில் வித்தியாசமான வார்த்தைகளைத் தேடிப்பிடித்து பேசினார். எப்படி பேசுகிறார் என ஆச்சரியமாக இருந்தது. என்னைத் தமிழில் இலக்கணப்படி பேசச் சொன்னால் பேச வராது. கிராந்தி பிரசாத் தமிழும் தெரியாமல் தெலுங்கு ஆட்களை வைத்து தமிழ்ப்படம் இயக்கியிருக்கிறார். அவர் வெவ்வேறு ஏழு மொழிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வைத்துள்ளார்.
இயக்குநர் கிராந்தி பிரசாத் இங்கே பேசும் போது படத்தில் பல பிரச்சினைகள் வந்ததாகச் சொன்னார். பிரச்சினை இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி வரும். அந்த வெற்றியை ரசிக்கவும் முடியும். நான் என் டைரியில் எழுதி வைத்திருப்பேன் "பிரச்சினைகள் நிறுத்தக் கோடுகள் அல்ல. அவை வழிகாட்டும் கோடுகள்" என்று.
"பதினாறு வயதினிலே' படத்தின் நாங்களும் பிரச்சினையைச் சந்தித்தோம். அது எங்கள் இயக்குநருக்கு முதல் படம். உதவி இயக்குநராக எனக்கும் முதல் படம். முதல் ஷெட்யூல் பெங்களூரிலிருந்து மைசூர் போவதாகத் திட்டம். ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்துவதாகத் திட்டத்துடன் போயிருந்தோம். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு புறப்பட்டபோது படப்பிடிப்பு ரத்து என்றார்கள்.
போன வேகத்தில் ஊர் திரும்ப வேண்டியதாகிவிட்டது, தன் முதல்பட ஆரம்பமே இப்படி இருந்தால் எங்கள் இயக்குநருக்கு எப்படி இருந்திருக்கும்? அதே மாதிரி என் முதல் படம் நான் முதலில் இயக்கிய 'சுவர் இல்லாத சித்திரங்கள்' பூஜையுடன் தொடங்கியபோது என் கூட இருந்த நண்பருக்கு பிரியாணி சாப்பிட்ட போது ஏதோ ஒத்துக் கொள்ளாமல் போய் வலிப்பு வந்து பெரிய பிரச்சினையாகி விட்டது. எனவே பிரச்சினை எல்லாருக்கும் இருக்கும். பிரச்சினைக்குப் பிறகு வரும் வெற்றியையே அனுபவிக்க முடியும். வெயிலில் சுற்றினால் தான் நிழலின் அருமை தெரியும்' என்றார்.
விழாவில் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது , " இது புதுமுகங்கள் நடித்த படம், படத்தில் பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. இருந்தாலும் யாரும் வாங்க முன் வரவில்லை. பாடலைக் கேட்டு விட்டு நன்றாக இருக்கிறது என்பார்கள். யார் நடித்தது என்பார்கள் புதுமுகங்கள் என்றதும் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். கடைசியில் ஜங்லீ மியூசிக் வாங்கி உதவியுள்ளார்கள். நான் கேட்கிறேன் புதுமுகங்கள் என்றால் ஏன் வாங்க மாட்டீர்கள்? இன்று பிரபலமாக இருக்கும் எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள் தானே?" என்றார்.
விழாவில் இசையமைப்பாளர் சிவநக், நடிகர்கள் நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, ஷிவானி, அபேக்ஷா, பாடலாசிரியர் ப்ரியன். எடிட்டர் கிராந்தி குமார், தெலுங்கு இயக்குநர் ராஜசேகர ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கிராந்தி பிரசாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சந்தோஷத்தில் கலவரம்’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டுள்ளார்.
சந்தோஷத்தில் கலவரம் என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இப்படத்தைக் கிராந்தி பிரசாத் இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள், குறும்படங்களை இயக்கியவர். அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர். திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர், தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர். இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம். தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும் தரப்படும் மரியாதையை வைத்து தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார்.
ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் 'சந்தோஷத்தில் கலவரம் 'என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி வி.சி. தயாரிக்கிறார். "ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் 'தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல்' என்று டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம் இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் "என்கிறார் இயக்குநர் கிராந்தி பிரசாத்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டார். வெளியிட்ட பிறகு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவரது வாழ்த்து குறித்து இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது, "எஸ்.ஏ.சி.சார் துணிச்சலான பெரும் புகழ் பெற்ற இயக்குநர். அவர் எங்களை வாழ்த்தியது ஆசீர்வதித்தது எங்கள் படக்குழுவிற்கே பெரும் பலம் கிடைத்த உணர்வைத் தருகிறது என்றார்.
நிரந்த், ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி. கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ரவி மரியா வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார்.
படத்துக்கு ஒளிப்பதிவு பவுலியஸ் இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர். இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்து பணியாற்றியுள்ளார். இவருடன் ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவநக் இசையமைத்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X